alangaara vaasal

Monday, February 11, 2013

நாகூர் நாயகம் - ஹிலுரு (அலை) சந்திப்பு

அன்பிற்கினிய பாதுஷா நாயகத்தின் ஆஷிகீன்களே !! பக்தர்களே !!! தொடர்ந்து  பக்தியோடு ஆண்டவர்களின் சரித்திரத்தை என் வலைப்பூ தளத்திலே பார்வையிடும் ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் நன்றி கூறி ஆண்டவர்களின் சரித்திரத்தை தொடர்கிறேன் ..
நாகூர் ஆண்டவர்கள் நான்கு வயதில் கல்வி கற்றுவரும் காலத்தில் , ஒருநாள் ஒரு மரநிழலில் தனித்து நின்றார்கள் . அப்போது , நறுமணம் கமழும் பரிசுத்தமான வெள்ளை உடை அணிந்த முதியவர் ஆண்டவர் அவர்கள் அருகில் வந்து , " அல்லாஹ்வுக்கு பிரியமானவர்களே !! ஹசன் குத்தூசின் மைந்தரே !! அப்துல் காதிரே !! இங்கு தனித்து நிற்கிறீர்களா ?? உங்கள் வாயைத் திறந்துக் கொள்ளுங்கள் " என்று சொன்னார்கள் . ஆண்டவர்களும் வாயைத் திறந்தார்கள் . அப்போது அந்த பெரியவர் ஆண்டவர்களின் வாயில் மூன்று முறை துப்பிவிட்டு , " அப்துல் காதிரே !! அல்லாஹ் இன்று உங்களுக்கு இல்மையும் விலாயத்தையும் நிரப்பமாக்கினான் " என்று சொன்னார்கள் . ஆனந்தம் தரும் இந்த சொல்லைக் கேட்டு சந்தோஷமாய் அந்த முதியவரைப் பார்த்து ஆண்டவர் அவர்கள் தாங்கள் யார் ?? என்று கேட்டார்கள் . அதற்கு அவர்கள் , " நான்தான் ஹிலுரு (அலை) " என்று சொல்லிவிட்டு மறைந்து  
போனார்கள் . 
பின்பு அடிக்கடி ஹிலுரு (அலை) அவர்கள் வந்து , ஆண்டவர் அவர்களை சந்தித்து , சலாம் சொல்லி , பேசிக் கொண்டிருப்பார்கள் . பல தடவைகளில் மதரஸாவிற்கு வந்து ஆண்டவர் அவர்களுக்கு ஓதிக் கொடுப்பார்கள் . இதுவல்லாமல் மலக்குகளும் ரிஜாலுள் கைபு என்னும் மறைவான மனிதர்களும் வந்து , ஹழ்ரத் ஆண்டவர் அவர்களை சந்தித்து , சலாம் சொல்லி  போவார்கள் . இது நடக்கும்போதெல்லாம் ஆண்டவர் அவர்கள் பெற்றோர்களிடம் தெரிவிப்பார்கள். இதை அவர்கள் கேட்டு , ஆனந்தம் கொண்டு மைந்தர் மீது அதிக பக்தியுடன் இருப்பார்கள் .
ஆண்டவர் அவர்கள் ஐந்து வயதிலேயே திருக்குர்ஆனை ஓதி , மனப்பாடம் செய்துவிட்டார்கள் . எட்டுவயதிற்குள் அரபு இலக்கிய , இலக்கணம் முதலான லுகத்து , நதவு , சருபு முதலிய எல்லா நூல்களையும் சிறப்பாக கற்று தேறி , பிக்ஹு , அகாயிது , தசவ்வபு என்கிற மூன்றுவகை அறிவுகளையும் கற்றுத் தெளிந்தார்கள் . 14 வகை இல்முகளும் அவர்கள் மனமே இருப்பிடம் என்று குடிக்கொண்டன . இனி கற்கவேண்டியது ஒன்றுமில்லை என்னும் அளவிற்கு எல்லா கல்விகளையும் கற்று நிரப்பமானார்கள் .
ஹழ்ரத் ஆண்டவர் அவர்கள் வயது ஏற ஏற ஒழுக்க வழக்கங்களில் பெற்றோர் கண்டோர் கேட்டோர் மனம் குளிர்ந்து சந்தோசப்படும் அளவிற்கு நடந்துக் கொண்டார்கள் . 
தீனுல் இஸ்லாமுடைய சறவு என்கிற கட்டளைப்படி ஒரு சிறுபாவத்தையும் பெரும்பாவம் என்று நினைத்து இயன்றவரை அதை தவிர்த்து நடக்கவே முயல்வார்கள் . எந்நேரமும் அல்லாஹுதஆலாவை நினைத்து , அஞ்சி நடப்பார்கள் . 5 வேளை தொழுகையையும் நேரம் தவறாமல் தொழுவார்கள் . தினமும் குர்ஆன் ஓதுவார்கள் . வயது வர வர அதிக தேர்ச்சி பெற்றவர்களாய் விளங்கினார்கள் .

No comments:

Post a Comment