alangaara vaasal

Tuesday, February 19, 2013

ஆணவம் கொண்டவருக்கு கொம்பு முளைத்தது


அன்பிற்கு இனியவர்களே !!! தொடர்ந்து நாகூர் ஆண்டவர்களின் சரித்திரத்தை பக்தியோடு படித்து வரும் பிரியமானவர்களே!! உங்கள் அனைவருக்கும் நாகூர் ஆண்டவர்களின் ஆசி நிலைக்கட்டுமாக !!!நீங்களோ ,உங்களை சார்ந்தவர்களோ நாகூர் வர இருந்தால் அவசியம்  என்னைத் தொடர்புக் கொள்ளுங்கள் .தர்கா சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து தரவும் யாருக்கேனும் மனதளவிலோ உடலளவிலோ தீராத பிரச்சனைகள் இருந்தாலும் சொல்லுங்கள் . உங்களுக்காக பாதுஷா நாகூர் ஆண்டவர்களின் தர்பாரிலே துஆச் செய்து தப்ரூக் அனுப்பி வைக்க காத்திருக்கிறேன் .எனது செல் நம்பர் +91 98941 25478 . சரி! நம் பாதுஷா நாயகத்தின் சரித்திரத்தை தொடருவோம் .  
 நாகூர் நாயகம் அவர்கள் முஈனுதீன் அவர்களுடன் மலை ,நதி ,வனம் ,வனாந்திரங்களை எல்லாம் கடந்து குவாலியரை நோக்கி நடந்து போகிற போது பஸ்தாம் என்னும் நகரம் எதிர்ப்பட்டது .அந்நகரின் வெளிப்புறத்தில் ஒரு அகன்ற நதி ஓடியது .ஆண்டவர்கள் அந்நதிக்கரையை அடைந்தபோது சூரியன் அஸ்தமித்தது .                                                                                                  பொழுதுபட்டபோது ,நோன்புதிறந்து பசியாறுவதற்கான எந்த உணவும் அவர்களிடம் இல்லை .உணவு தேடிக்கொள்ள எந்த வசதியும் இல்லை. அதனால் ஆண்டவரவர்கள் கைகளை ஏந்தி , அல்லாஹ்விடம்  துவாச் செய்தார்கள் .உடனே வானத்திலிருந்து இரண்டு ரொட்டியும் தண்ணீரும் இறங்கியது .அதை இருவரும் பகிர்ந்து நோன்பை திறந்து பசியாறினார்கள் .அதன் பிறகு ஒரு மரத்தின் கீழ் ஆண்டவர் அவர்கள் அல்லாஹ்வைத் தொழுது அன்று இரவு முழுவதும் இபாதத் என்னும் வணக்கத்தில் ஈடுபட்டார்கள் .           பின்பு பஜ்ரு நேரம் வந்தது .ஆண்டவர்கள் பஜ்ரு தொழுதுவிட்டு ஆற்றைப் பார்த்தார்கள் .வெள்ளம் கரைப் புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. 
ஆற்றைக் கடந்தால் மட்டுமே பஸ்தாம் சென்றடைய முடியும் .ஆண்டவர் அவர்கள் சற்று யோசித்து ,அங்கிருந்த ஆலமரத்தின் ஒரு இலையை பறித்து சில அஸ்மாக்களை ஓதி அதில் ஊதி ,அதை ஆற்றில் எறிந்தார்கள் .அந்த இலையானது உடனே ஒரு வள்ளமாய் மாறி ஆற்றில் மிதந்தது .                    ஆலிலை வள்ளமானபோது ஹஜ்ரத் ஆண்டவரவர்கள் முயீனுதீனை அழைத்துக்கொண்டு அதில் ஏறி உட்கார்ந்தார்கள் .அந்த வள்ளம் அக்கரை நோக்கி ஓடத் தொடங்கியது .வேகமெடுத்து ஓடிய அந்த வள்ளம் ஆற்றின் நடுவிற்கு வந்தபோது ,பிரவாகித்து ஓடும் அந்த ஆறு திடீரென்று கொந்தளித்தது .காற்றும் வேகமாக வீசியதால் ஆண்டவர்கள் வந்த வள்ளம் கவிழக்கூடிய நிலையில் இருந்தது .இதைக் கண்ட ஆண்டவர்கள் திடீரென்று ஏற்பட்ட ஆபத்தை நீக்குவதற்காக தங்கள் இருகரம் ஏந்தி அல்லாஹ்விடம் துவா கேட்டார்கள் .அவர்கள் துவா கேட்க ஆரம்பித்த உடனேயே ,காற்றின் வேகம் தணிந்தது கொந்தளிப்பு அடங்கி,அலை ஒடுங்கி ,ஆறு சாந்தமாயிற்று .அதனால் ,வள்ளம் நேராய்,முன் போல அக்கரை நோக்கி சீராய் ஓடிற்று .கரை வந்தவுடன் ஆண்டவரவர்கள் முஈனுதீனுடன் வள்ளத்திலிருந்து இறங்கினார்கள் உடனே,வள்ளம் பழைய ஆலிலையாய் மாறி ஆற்றில் மிதந்து போயிற்று .                                                                                                                                    கரையில் இறங்கிய ஆண்டவரவர்கள் லுஹர் நேரமாகிவிட்டதால் தோழருடன் ஒளு செய்துக் கொண்டு தொழுது விட்டு ஒஜீபா ஓதிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் .அப்போது ஒரு முஸ்லிமான கூட்டத்தார் ஆண்டவரவர்கள் சமூகத்தில் வந்து நின்று சலாம் சொல்லி ,இதன் கீழ்வருமாறு சொல்லத் தொடங்கினார்கள்.;-                                                                  "எஜமானவர்களே ! இந்த பஸ்தாம் நகரில் ஷெய்கு நஜீமுதீன் என்ற பெரியவர்கள் இருக்கிறார்கள் . அவர்கள் பல கறாமாத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு அடிக்கடி ஜதபு வருகிற காரணத்தினால் நகரில் இல்லாமல் இந்த ஆற்றங்கரையில் வசித்து வருகிறார்கள்.நேற்று அவர்கள் ஜன்னலிலிருந்து வெளியே ஆற்றின் பிரவாகத்தைப்  பார்த்துக் கொண்டிருந்தப்போது அவர்கள் தலையில் கொம்பு முளைத்து கிளைவிட்டு ஜன்னலில் படர்ந்துக் கொண்டது அதனால் தலையை உள்ளே இழுக்க முடியாமல் தவிக்கிறார் . அவரைப் பார்ப்பதற்காக நகரின் பெரிய மனிதர்கள் அனைவரும் வந்துக் கூடி அவருக்கு ஏற்ப்பட்ட அதிசயத்தை ஆச்சரியத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள் .அப்போது அந்தப் பெரியவர் வந்தவர்களைப் பார்த்து ,"என் நேசர்களே !!! எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலைக்கு காரணம் உங்களுக்கு தெரியாது. நான் அறிவேன் .இதிலிருந்து என்னை விடுவிக்க சொல்லி அல்லாஹ்விடம் மன்றாடினேன்.       
அதற்கு, "நஜீமுதீனே! உம் பாவம் பொறுக்கப்பட்டது ஆனாலும் நீர் யாருக்கு இந்தப் பிழையை செய்தீரோ, அவர்தான் சையிது அப்துல் காதிறு ,அவரிடம் மன்னிப்பு கேட்பதில் பிரயாசை எடுத்துக்கொள்வீராக !என்றுக் கட்டளையிட்டான் .அந்த சையிது அப்துல் காதிறு என்பவர்  இப்போது இந்த ஆற்றங்கரையில் இன்ன இடத்தில தொழுதுவிட்டு ஓதிக்கொண்டிருக்கிறார். நீங்கள் அவரிடம் போய் சலாம் சொல்லி என் நிலையை அறிவித்தால் அவர் மனமிரங்கி என் அருகில் வந்து துவாச் செய்வார் அப்போது இந்த ஆபத்து என்னை விட்டு நீங்கிவிடும் "என்று சொல்லி எங்களை தங்கள் சமூகத்திற்கு அனுப்பி தங்களை அழைத்து வர சொன்னார் " என்றார்கள் .                                                                                                          இதைக் கேட்ட ஆண்டவரவர்கள் " ஆ! அப்படியா! " என்று விரைந்து எழுந்து ,அவர்களோடு நஜீமுதீனுடைய இடத்திற்கு போனார்கள் .அங்கே ஊரிலுள்ள பெரிய மனிதர்கள் எல்லாம் கூடி இருந்தார்கள். அங்கே நமது நாயகமவர்கள் நஜிமுதீன் தலையில் கொம்பு முளைத்து மாட்டிக்கொண்டு பாடுபடுவதை பார்த்து ஆச்சரியப்பட்டு ,அவரை நோக்கி, ஷெய்கே! இதென்ன காரியம் என்று கேட்டார்கள் . அப்போது அவர்கள் ஆண்டவர்களைப் பார்த்து , " என்  சகோதரரே !! நீங்கள் வள்ளத்தில் ஏறிக்கொண்டு நடு ஆற்றில் வரும்போது ,உம்மை நான் சோதிக்கவேண்டுமென்று ஆற்றை கொந்தளிக்க வைத்து வள்ளத்தை புரண்டுப் போக செய்தேன் .அப்போது நீங்கள் செய்த பதுவாவினால் என் தலையில் இந்த கொம்புகள் முளைத்தன .அதனால் தலையை வெளியே எடுக்க முடியாமல் வருத்தப்பட்டு அல்லாஹ்விடம் மன்றாடினேன் அதற்கு அவன் இந்த கேடு உங்களிடம் மன்னிப்பு கேட்பதால் மட்டுமே தீரும் என்று கட்டளையிட்டான். ஆகையால் செய்யிது அப்துல் காதிறு அவர்களே !! நீங்கள் என்னை மன்னித்து ரட்சிப்பீராக! ", என்று மிகவும் பணிவோடு வேண்டினார்.                                                  
ஹஜ்ரத் ஆண்டவரவர்கள் மனமிரங்கி ,தங்கள் வலது கையை தூக்கி ஷெய்கு நஜிமுதீன் தலையில் முளைத்திருக்கும் இரண்டு கொம்புகளுக்கும் இடையில் வைத்தார்கள்.அந்த கொம்புகள் இரண்டும் சுருங்கி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயின. நஜிமுதீன்அவர்கள்  ஆண்டவரவர்களை கட்டித்தழுவி , மரியாதை செய்து தன் பீடத்தில் அமரும்படி பணித்தார் .  
ஷெய்கு நஜிமுதீன் அவர்கள் தம் மாளிகையில் வந்து , கூடியிருக்கும் மக்களைப் பார்த்து , " என் நேசர்களே !! நீங்கள் எல்லோரும் இவருக்கு மரியாதை பண்ணுங்கள் . இவர் , அல்லாஹ்வுக்கு மிகவும் நேசரானவர் . இனிமேல் , குத்புகளுக்கெல்லாம் குத்பு ஆவார்; மனிதர்களையும்,ஜின்களையும்.இரட்சிக்கும் கௌது ஆவார்;அவ்விரு கூட்டத்திற்கும் நேர்வழி காட்டுவார் .இவருடைய கராமாத்துக்கள் இனி கியாமத்து உண்டாகும் வரை நிலைபெற்றிருக்கும் இவருடைய ஜீவிய காலத்தில் இவரை நாடினவர்களை இவர் ரட்சிப்பதுப் போல் மரணத்திற்குப் பின்னும் இரட்சிப்பார் .இவரை பின் தொடர்ந்த மனிதர்களும்,ஜின்களும் அச்சமற்று இருப்பார்கள்.என்று சொல்லி காட்டினார்.                                                        நாகூர் ஆண்டவர்களின் தர்காவிலே,இன்றளவும் எத்தனை மக்கள் தம் துன்பம் தீர்ந்து மனமகிழ்ச்சியாக சந்தோசமாக தன் குடும்பத்தாரோடு வந்து ஆண்டவர்களை தரிசித்து செல்கிறார்கள் என்பதை இந்த உலகமே அறியும் .

No comments:

Post a Comment