alangaara vaasal

Saturday, February 9, 2013

உமிழ்நீரிலிருந்து பொற்காசு

அன்பிற்கினியவர்களே !! தொடர்ந்து பாதுஷா நாயகத்தின் வரலாற்றைப் படித்து வரும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுஷா நாயகத்தின் பொருட்டால் நல்அருள் புரிவானாக !! நாகூர் ஆண்டவர் அவர்கள் பிறந்த நாளிலிருந்தே அவர்களால் மக்களுக்கு அவரவர் வேண்டின அநேக நல்ல காரியங்கள் நிறைவேறி வந்தன . வாதம் , பித்தம் , அம்மை பெருவியாதி போன்ற பலவித நோய்களும் , கூன் , குருடு , செவிடு , முடம் , மலடு போன்ற பிறவித் துன்பம் மற்றும் ஜின் , ஷைத்தான்களால் துன்பப்பட்டவர்களும் மனவேதனையால் நிம்மதி இழந்தவர்களும் வந்து ஆண்டவர் அவர்களை தரிசித்து அவரவர் துன்பம் நீங்கி இன்பத்துடன் போனார்கள் . (இன்றும் பாதுஷா நாயகத்தின் தர்காவிற்கு வந்து ஜியாரத் செய்து அவரவர் வேண்டின அநேக நல்ல காரியங்கள் நிறைவேறி துன்பம் நீங்கி இன்பத்துடன் போகிறார்கள் என்பதை இவ்வுலகமே அறியும் .நாமும் அறிவோம் .) 
ஆண்டவர் அவர்கள் ஐந்து மாத குழந்தையாய் இருந்தபோது தாயாரிடம் பால் குடித்துக் கொண்டிருந்தார்கள் . அப்போது வீட்டு வாசலில் ஒரு ஏழை வந்து அல்லாஹ்வுக்காக ஏதாவது கொடுங்கள் என்றுக் கேட்டார் . அந்த வேளையில்   அவருக்கு கொடுக்கக்கூடிய பொருள் ஒன்றும் வீட்டில் இல்லை . அன்னை பாத்திமா அவர் சொல்லைக் கேட்டு மனம்வருந்தி என்ன செய்வது ?? ஒன்றும் கொடுக்காமல் அவரைப் போகச் சொல்வதா ?? என்று கவலைப்பட்டு மடியில் இருக்கும் மைந்தர் முகத்தை உற்றுப்பார்த்தார்கள் . அப்போது ஆண்டவர் அவர்கள் வாயில் இருந்து உமிழ்நீர் வடிந்துக் கொண்டிருந்தது . அதில் அவ்வூரில் வழங்கும் பொற்காசு ஒன்று இருந்தது . அதைக் கண்ட அன்னை பாத்திமா அவர்கள் ஆச்சர்யப்பட்டு அதை எடுத்து வாசலில் நிற்கும் ஏழைக்கு கொடுத்து அவரை சந்தோசத்துடன் அனுப்பிவிட்டு அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்கள் .இப்படி வாசலில் வரும் முசாபிர்களுக்கு கொடுக்க சொல்லி பல தடவை ஆண்டவர் அவர்கள் வாயிலிருந்து  பொற்காசு வந்து க்கொண்டிருண்டதாக பல சரித்திர நூல்களில் சொல்கிறார்கள் . 

No comments:

Post a Comment