alangaara vaasal

Thursday, February 7, 2013

நாகூர் ஆண்டவர்களின் முதல் அற்புதம்

நாகூர் ஆண்டவர்கள் தன் தாய்வயிற்றில் கருவில் இருந்தபோது ஒருநாள் ஆண்டவர்களின் தாயார் செய்யிதா பாத்திமா (ரஹ்) சுபுஹு நேரத் தொழுகைக்காக ஒளு செய்ய கிணற்றில் தண்ணீர் எடுத்தார்கள் . அப்போது கயிறு அறுந்து தண்ணீருடன் வாளியும் கிணற்றில் விழுந்தது . நேரமோ சென்றுக்கொண்டு இருந்தது . எவ்வளவு முயற்சி செய்தும் வாளியை எடுக்க முடியவில்லை . ஆண்டவர்களின் தாயார் செய்யிதா பாத்திமா(ரஹ்) அவர்கள்,   " யா அல்லாஹ் ! சுபுஹு நேரம் முடிவதற்குள் நான் தொழுதாக வேண்டுமே " என்று துஆக் கேட்டு முடியவும் அவர்கள் வயிற்றிலிருந்து "தண்ணீர் நிறைந்த வாளி தங்கள் பக்கத்தில் இருக்கிறது " என்று குரல் கேட்டது . கிணற்றில் விழுந்த வாளி தண்ணீருடன் இருப்பதைக் கண்டு பெருமகிழ்வு அடைந்தார்கள். இதுவே நம் ஆண்டவர் அவர்களின் முதல் அற்புதம் .. 
தொடரும் நண்பர்களே .................................................................................................................

No comments:

Post a Comment