alangaara vaasal

Saturday, February 9, 2013

about me வாருங்கள் நாகூர் தர்காவிற்க்கு

எல்லா புகழும் இறைவனுக்கே!! சர்வ வல்லமையுடைய அல்லாஹ்வின் திருநாமம் போற்றி ........அஸ்ஸலாமு அலைக்கும் .(வரஹ் .....) எனது பெயர் ஹெச் .வாஞ்சூர் பக்கிர் சாஹிப் .நான் நன்னகராம் நாகூரில் அருளாட்சி செய்து வரும் எல்லா மதத்தினராலும் நாகூர் ஆண்டவர் என்றும் வட மாநிலத்தவர் மற்றும் உருது மொழி பேசுபவர்களால் காதிர்வலி என்றும் சுற்று வட்டார மக்கள் மற்றும் உள்ளூர்வாசிகளாலும் பெரிய எஜமான் என்று அன்போடு அழைக்கப்படும் ஹஜ்ரத்  செய்யிது ஷாஹுல் ஹமீது மீரான் சுல்தான் காதிர்வலி கஞ்சசவாய் கஞ்சபக்ஷ் பாதுஷா நாயகம் அவர்களின் வழித்தோன்றல் (பரம்பரை ஆதீனம்) என்பதில் பெருமகிழ்வு அடைகிறேன் . எனக்கு தமிழ் , ஆங்கிலம் , உருது , அரபி பேசத் தெரியும் . எனக்கு புத்தகங்கள் படிப்பதில் மிக்க ஆர்வம் . நாகூர் தர்காவுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு ஆண்டவர்களின் வரலாறு , முக்கிய இடங்களைக் காண்பிப்பது , மனநிறைவாக பாத்திஹா ஓதி தப்ரூக் வழங்கி அவர்களை மகிழ்வோடு ஊருக்கு அனுப்பி வைப்பது எனது கடமை . முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் சிங்கப்பூர் , மலேசியா , இலங்கை தமிழர்கள் மற்றும் அனைவருக்கும் அவர்கள் விரும்பக்கூடிய வகையில் தங்குமிடம் , உணவு மற்றும் அன்னதானம் தர்காவுக்கான நேர்த்திக்கடன் அனைத்தையும் உங்கள் விருப்பப்படி சிறப்பான முறையில் செய்து தருகிறேன் . நாகூர்  வரும் அன்பர்கள்என்னை  hvf.sahib@yahoo.com என்ற இ மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் .வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு ஏர்  போர்ட்டுக்கு அவர்கள் விரும்பும் வகையில் ஏ சி வாகன வசதி செய்து தரப்படும் .நான் இந்த வலைப்பூ தளம் உருவாக  காரணமே இங்கு தர்காஹ்விற்கு வருகை தருகிற நிறையப்பேர்களுக்கு ஆண்டவரவர்களின் சரித்திரம் தெரியவில்லை . இதனால் என்னால் இயன்றஅளவு எங்களின் பாட்டன் , முப்பாட்டன் சொன்னதைக் கேட்டும் நிறைய பத்திரிக்கைகள் , புத்தகங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் இதை ஹஜ்ரத்  செய்யிது ஷாஹுல் ஹமீது மீரான் சுல்தான் காதிர்வலி கஞ்சசவாய் கஞ்சபக்ஷ் பாதுஷா நாயகம் அவர்களின் ஆஷிகீன்கள் , பக்தர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றேன் . எனக்கு சில வரலாற்று சிறப்புமிக்க நாகூர் தர்காவின் முக்கிய இடங்கள் , கல்வெட்டுகள் , பொருட்கள் ஆகியவற்றை துல்லியமாக போட்டோ எடுத்து இதில் அப்லோடு செய்ய விருப்பம் . இதற்காக எனக்கு ஒரு தரமான கேமரா தேவைப்படுகிறது . எனக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் என்னை தொடர்புக் கொள்ளவும் .நீங்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ துவாச் செய்கிறேன் . நாகூர் ஆண்டவர்களின் சிங்கப்பூர் , மலேசிய பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களையும் , பிரார்த்தனைகளையும் நேரில் வந்தும் வராத பட்சத்திலும் அங்கிருந்தே செய்துக் கொள்ள என்னை தொடர்புக் கொள்ளவும் தொடர்புக்கு : +91 98941 25478 .. 
இந்த நாகூர் ஆண்டவர்களின் சரித்திரத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளும்போது பிழைகள் இருந்தால் என்னை மன்னித்து பிழையை சுட்டிக்காட்டும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன் ..

No comments:

Post a Comment