alangaara vaasal

Sunday, February 10, 2013

கொட்டிய பால் மீண்டும் பாத்திரத்தில் வந்தது

நம் ஆண்டவர் அவர்கள் தாமாகவே பால்குடி மறந்து , நல்ல உணவுகள் உண்டு , சிற்றடி எடுத்துவைத்து திருநடை பயின்று , மழலைச் சொல் பேசிப்பழகி நாளொரு வண்ணமாய் வளர்ந்துவந்தார்கள் . இப்படி வளர்ந்து வயது மூன்று நிரப்பமாயிற்று .
ஒருநாள் , தாயார் பாத்திமா அவர்கள் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள் . நாகூர் ஆண்டவர்கள் அங்கு வந்து , " பால் காய்ச்சி முடிந்ததும் எனக்கு கொஞ்சம் குடிக்கத் தாருங்கள் " என்று சொன்னார்கள் . பால் தயாரானதும் தாயார் அவர்கள் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றினார்கள் . எதிர்பாராவிதமாக கைநழுவி பால் அனைத்தும் அடுப்பில் கொட்டி வீணானது . மகன் ஆசையாகக் கேட்டு இப்படி பால் அனைத்தும் கொட்டிவிட்டதே என்று அன்னை பாத்திமா மனம்வருந்தினார்கள் . அங்கு வந்த ஆண்டவர் அவர்கள் பால் கொட்டிக் கிடப்பதையும் தாய் மனம் வருந்துவதையும் கண்டு , " கவலைப்படாதீர்கள் . பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பிஸ்மில்லாஹ் சொல்லி அள்ளி எடுங்கள் " என்றார்கள் . அவர்களும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பிஸ்மில்லாஹ் சொல்லி அள்ளினார்கள் . என்ன ஆச்சர்யம் !!! கொட்டிய பால் அனைத்தும் தூசிகள் இன்றி அந்த பாத்திரத்தில் மீண்டும் நிறைந்தது . தாயார் மனமகிழ்ந்து மைந்தர் கையில் பாலைக் கொடுத்தார்கள் . அதை ஆண்டவர் அவர்கள் வாங்கி பருகி பசி தீர்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்கள் . 
அடிக்கடி இப்படி பல புதுமைகள் தாயார் மற்றும் எல்லோரும் இக்குழந்தையைக் கொடுத்த அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லாத நாள் இல்லை . சுற்றத்தார்களுக்கு உண்டான ஆனந்தத்திற்கும் அளவில்லை . அற்புதங்கள் அங்கு பரவிக்கொண்டு இருப்பதால் சுற்றுவட்டதாரும் அதிக ஆச்சர்யம் அடைந்தவர்களாக பயபக்தியோடு இருந்து வந்தார்கள் .  
நாகூர் ஆண்டவர் அவர்களின் அருமையான பக்தர்களே !!! நமது பாதுஷா நாயகம் அவர்களின் பேரரும் மகனார் சின்ன எஜமான் ஹழ்ரத் யூசுப் தாதா அவர்களின் அருமை மகனாருமாகிய ஹழ்ரத் பாவா பஹ்ருதீன் ஷஹீத் (ரலி) அவர்கள் அடக்கமாகியிருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் காட்டுபாவா பள்ளிவாசலில் இன்று கொடியேற்றம் நடைபெறுகிறது . அன்னவர்களின் துஆ பரக்கத் நம் அனைவர் மீதும் நிலைக்கட்டுமாக !!! ஆமீன் ... அன்புடன் , ஹாஜி H . வாஞ்சூர் பக்கீர் சாஹிப் 98941 25478 ..   

No comments:

Post a Comment