alangaara vaasal

Saturday, February 9, 2013

நோன்பு பிறையை அறிவித்த ஆண்டவர்கள்

நமது நாகூர் ஆண்டவர்கள் சரித்திரத்தை பேராவலோடு தொடர்ந்து பார்த்து ஆதரவு அளித்து வரும் அருமை பக்தர்களுக்கு இந்த நாள் இனிய நாளாகட்டும் என்று கூறி தொடர்கிறேன் .
நமது நாகூர் ஆண்டவர்கள் பிறந்து 15 மாத குழந்தையாய் இருக்கும்போது நோன்பு மாதம் வந்தது . ரமலான் பிறை காணவேண்டிய அன்று மாலையில் ஆகாயத்தில் வந்து மூடி பிறை காணப்படவில்லை . அதனால் ஊரார் நோன்பு வைத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டார்கள் . அன்றைய சஹர் நேரம் செய்யிதா பாத்திமா குழந்தையான ஆண்டவர்களை தூக்கி பாலூட்டப் போனபோது ஆண்டவர் அவர்கள் பால் குடிக்காமல் , முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் . அன்று பொழுதுவிடிந்தும் பால் குடிக்கவில்லை .
குழந்தை சென்ற வருஷத்து ரமலான் மாத 30 நாளும் நோன்பு நேரத்தில் பால் குடிக்காமல் இருந்ததால் இப்போதும் அப்படியே இருக்கிறது . ஆகையால் , இன்று இரவுதான் ரமலான்மாத முதல் பிறை என்று தீர்மானித்து தாமும் அன்றைக்கே நோன்பு பிடித்து ஊராருக்கும் தெரிவித்தார்கள் . செய்யிது ஹசன்  குத்தூசின் அற்புத பாலகர் பால்குடிக்காமல் இருப்பதால் இன்று ரமலான் மாத முதல் பிறை என்று மாணிக்கப்பூர்வாசிகள் அனைவரும் ஒருமித்து எல்லோரும் அன்றைக்கே நோன்பு வைத்துக்கொண்டார்கள் . அந்த வருடம் அவ்வூர் மக்களுக்கு 30 நோன்பும் கிடைத்தன .
இந்த அற்புத நாயகரான ஆண்டவர் அவர்கள் மார்க்க சட்டப்படி பால்குடி மறக்கும் காலம் வந்தபோது பெற்றோர்களின் எந்த முயற்சியும் இல்லாமல் தாங்களாவே வலிய பால்குடி மறந்தார்கள் . இதுவும் எல்லோர்க்கும் ஆச்சர்யமாக இருந்தது . 

No comments:

Post a Comment