alangaara vaasal

Friday, February 8, 2013

நாகூர் ஆண்டவர்களின் பூவுலகத் தோற்றம்

ஹிஜ்ரி 910ஆம் ஆண்டு ஜமாத்துல் ஆஹிர் மாதம் 10ஆம் நாள் வெள்ளிக்கிழமை தஹஜ்ஜத் நேரத்தில் சுல்தானுல் அவ்லியா குத்புல் அக்தாப் கௌதுல் இஸ்லாம் மீரான் சுல்தான் செய்யிது அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீது கஞ்சசவாய் கஞ்சபக்ஷ் பாதுஷா சாஹிபு ஆண்டவர் அவர்கள் ஹழ்ரத்  ஹசன் குத்தூஸ்- அன்னை செய்யிதா பாத்திமா ஆகியோரின் அன்பு மகனாக இவ்வுலகில் பிறந்தார்கள் . அவர்கள் பிறந்தவுடன் மலக்குகளும் , அன்பியாக்களும் , அவ்லியாக்களும் ஆகாய மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாய் வந்து இறங்கி ஆண்டவர்களை தூக்கியெடுத்து முத்தமிட்டு துஆவும் செய்து தாயாராகிய பாத்திமாவுக்கு ஸலாமும் சுப சோபனமும் சொல்லி போய்க்கொண்டிருந்தார்கள் . அன்று பொழுது விடியும் வரை இது நடந்துக் கொண்டே இருந்தது . பின்பு பொழுது விடிந்து சூரியன் உதயமாயிற்று . சூரியன் உதித்த அதிகாலையில் நபி இல்யாஸ் (அலை) , நபி ஹிள்று (அலை) அவர்களும் பாத்திமாவின் மாளிகைக்கு வந்து ஹழ்ரத் ஆண்டவர்களை தூக்கி முத்தமிட்டு அவ்விருவர் வாயாலும் செய்யிது அப்துல் காதிரு என்று பெயரிட்டு அழைத்து துஆவும் செய்து தாயாராகிய பாத்திமாவுக்கு ஸலாமும் சுப சோபனமும் சொல்லிவிட்டுச் சென்றார்கள் .

அதன்பின் தந்தை ஹசன் குத்தூஸ் தங்கள் குடும்பத்தாருடன் சுற்றம்சூழ மகனுக்கு பெயரிட்டு சந்தோஷமாக இருந்தார்கள் .
ஆண்டவர்கள் பிறந்த அன்று ஊரில் உள்ள மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக மகத்துவமிக்க குழந்தையைப் பார்த்து துஆ செய்து தங்களுக்கு பரக்கத் தேடிக்கொண்டுப் போனார்கள் . இவ்வேளையில் அங்குவந்த ஒரு பெண் மகோதர நோய் வாய்ப்பட்டு இருந்தாள் . அவள் பேரருள்மிக்க குழந்தையை பார்த்துவிட்டு தன் கைகளை உயர்த்தி " யா அல்லாஹ் !! இந்த குழந்தை உன்னால் உவக்கப்பட்ட ஒலியாய் இருந்தால் இதன் பரக்கத்தைக் கொண்டு என் வியாதி தீரவேண்டும் " என்று அவள் கேட்டுமுடியவும் அவளுக்கு இருந்த துன்பங்கள் முழுவதும் நீங்கிவிட்டன . இதுவே நாகூர் ஆண்டவர்கள் பிறந்து நிகழ்ந்த முதல் அற்புதமாகும் ..

No comments:

Post a Comment