அன்பிற்கினியவர்களே! உங்கள் அனைவருக்கும் சாந்தியும் ,சமாதானமும் நிலவட்டும் !இன்று நம் தாஜுல் ஔலியா கௌசுல் ஆலம் முஹையதீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் நினைவு நாள் .அண்ணலாரின் ஆஷிகீன்கள் அவர்களை நினைவு கூர்ந்து துவா செய்யும் நாள் .இந் நன்னாளில் நம் அனைவருக்கும் வளமான வாழ்வை அல்லாஹ் தந்தருள்வானாக!ஆமீன்!
ஹஜ்ரத் சாஹுல் ஹமீது பாதுஷா நாயகமவர்கள் பஸ்தாம் நகரில் நுழைந்து அங்குள்ள ஒரு பள்ளியில் தங்கி இருந்தார்கள்.ஒரு நாள் அந்த ஊரை சேர்ந்த மலிக்குதுஜ்ஜாரி என்பவர் ஆண்டவரவர்களிடம் வந்து சலாம் சொல்லி,"எஜமானே!என் மனைவியை கடந்த ஐந்து வருடகாலமாக ஒரு பேய் பிடித்து வாட்டிகொண்டு வருகிறது.அதனால் அவள் படும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல என்ன பரிகாரம் செய்தும் அது விலகவில்லை. நாள் முழுவதும் அவள் அனுபவிக்கும் தாங்க முடியாத வேதனையால்,நானும்,என்குடும்பத்தினரும் ,பரிதவித்து வருகிறோம்.எங்களுக்கு நல்ல உணவு ,நல்ல உறக்கம் இல்லை. அவள் சரீரமெங்கும் எரிச்சலும்,குத்தலும்,இசிவும்,அலறுதலும்,புலம்புதலும் ஓய்வில்லாமல் இருக்கின்றன.அதற்காக பக்குவம் பண்ணினால், இவை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை .பார்ப்பவரும்,கேட்பவரும் பரிதாபப் படக்கூடிய வேதனையாக இருக்கிறது."என்று சொல்லி முறையிட்டார்.
மலிக்குதுஜ்ஜாரி இவ்வாறு சொல்லி அழுததும் ,அதைக் கேட்ட ஆண்டவர் அவர்கள் மலிக்குதுஜ்ஜாரியே ! நீங்கள் போய் உங்கள் மனைவி அருகில் நின்று, 'ஹிப்பத்து என்னும் பேயே ! இப்போதே நீ இவளை விட்டு புறப்படு ,உன் பிறப்பிடம் போய்ச் சேர். எளிதாய் போய்விடுவதே உத்தமம். இல்லையேல், துன்புறுத்தி விரட்டப்படுவாய். அதனால் நீயாகப் போய் விடு , நீ போன பின் இனி யாரையும் பிடித்து வருத்தாதே! என்று செய்யது அப்துல் காதிரு சொன்னார்கள் என்று அவளுடைய காதில் ரகசியமாக சொல்லுங்கள் என்று சொல்லி அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள்.
இதைக் கேட்ட மலிக்குதுஜ்ஜாரி சந்தோசமாய் வீட்டுக்கு வந்து ,மனைவி அருகேப் போய் ஹஜ்ரத் ஆண்டவர் அவர்கள் சொல்லி கொடுத்தப்படி அவள் காதில் ரகசியமாக சொன்னார்.ஒருபோதும் உருவேறாத அந்தப் பேய் உருக்கொண்டு ,அவரை அழைத்து பயங்கரமாக கீழ் வருமாறு சொல்லியது;
"ஏ ,மலிக்குதுஜ்ஜாரியே ! நான்தான் ஹிப்பத்து என்னும் பேய் என்பதை தெரிந்து கொண்டாயோ? ஆம், நான் ஹிப்பத்து தான்,உன் மனைவியை நான் அநியாயமாகப் பிடித்துக் கொள்ளவில்லை. இவளுடைய பாட்டன் அமீறேன்பவன், என் சொத்துக்களை பலவந்தமாக அபகரித்துக் கொண்டு ,என்னையும் கொன்றுவிட்டான். ஆகையால், நான் அவன் மீது ஏறி பிடித்து, அவனைக் கொன்று, பின் அவன் சந்ததிகளைத் தொடர்ந்து ஒவ்வொருவராக பிடித்து கொன்று வருகிறேன். அதுப்போலவே அவனுடைய பௌத்ரியாகிய இவளையும் பிடித்துக் கொண்டேன். இன்னும் சொற்பக் காலத்தில் இவளையும் கொன்று விடுவேன்.ஆனால், இன்று முதல் நான் இவளை வதைக்கவும், கொல்லவும் இடமில்லை. இன்றைக்கே புறப்பட சொல்லி கட்டளை வந்துவிட்டது. இதோ,நான் என் இருப்பிடம் செல்கிறேன். இவள் நிமித்தம் இனி யாரையும் பிடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கின்றேன்".
என்று சொல்லிவிட்டு, அந்தப் பேய் உடனே அவளை விட்டு புறப்பட்டு சென்றது . அப்போதே அவளுக்குள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து சுகமானாள் . இடைக் கண்ட மலிக்குதுஜ்ஜாரியும், ஆச்சரியமாய் சந்தோஷப்பட்டு ஆண்டவர் அவர்களை புகழ்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.
ஹஜ்ரத் சாஹுல் ஹமீது பாதுஷா நாயகமவர்கள் பஸ்தாம் நகரில் நுழைந்து அங்குள்ள ஒரு பள்ளியில் தங்கி இருந்தார்கள்.ஒரு நாள் அந்த ஊரை சேர்ந்த மலிக்குதுஜ்ஜாரி என்பவர் ஆண்டவரவர்களிடம் வந்து சலாம் சொல்லி,"எஜமானே!என் மனைவியை கடந்த ஐந்து வருடகாலமாக ஒரு பேய் பிடித்து வாட்டிகொண்டு வருகிறது.அதனால் அவள் படும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல என்ன பரிகாரம் செய்தும் அது விலகவில்லை. நாள் முழுவதும் அவள் அனுபவிக்கும் தாங்க முடியாத வேதனையால்,நானும்,என்குடும்பத்தினரும் ,பரிதவித்து வருகிறோம்.எங்களுக்கு நல்ல உணவு ,நல்ல உறக்கம் இல்லை. அவள் சரீரமெங்கும் எரிச்சலும்,குத்தலும்,இசிவும்,அலறுதலும்,புலம்புதலும் ஓய்வில்லாமல் இருக்கின்றன.அதற்காக பக்குவம் பண்ணினால், இவை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை .பார்ப்பவரும்,கேட்பவரும் பரிதாபப் படக்கூடிய வேதனையாக இருக்கிறது."என்று சொல்லி முறையிட்டார்.
மலிக்குதுஜ்ஜாரி இவ்வாறு சொல்லி அழுததும் ,அதைக் கேட்ட ஆண்டவர் அவர்கள் மலிக்குதுஜ்ஜாரியே ! நீங்கள் போய் உங்கள் மனைவி அருகில் நின்று, 'ஹிப்பத்து என்னும் பேயே ! இப்போதே நீ இவளை விட்டு புறப்படு ,உன் பிறப்பிடம் போய்ச் சேர். எளிதாய் போய்விடுவதே உத்தமம். இல்லையேல், துன்புறுத்தி விரட்டப்படுவாய். அதனால் நீயாகப் போய் விடு , நீ போன பின் இனி யாரையும் பிடித்து வருத்தாதே! என்று செய்யது அப்துல் காதிரு சொன்னார்கள் என்று அவளுடைய காதில் ரகசியமாக சொல்லுங்கள் என்று சொல்லி அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள்.
இதைக் கேட்ட மலிக்குதுஜ்ஜாரி சந்தோசமாய் வீட்டுக்கு வந்து ,மனைவி அருகேப் போய் ஹஜ்ரத் ஆண்டவர் அவர்கள் சொல்லி கொடுத்தப்படி அவள் காதில் ரகசியமாக சொன்னார்.ஒருபோதும் உருவேறாத அந்தப் பேய் உருக்கொண்டு ,அவரை அழைத்து பயங்கரமாக கீழ் வருமாறு சொல்லியது;
"ஏ ,மலிக்குதுஜ்ஜாரியே ! நான்தான் ஹிப்பத்து என்னும் பேய் என்பதை தெரிந்து கொண்டாயோ? ஆம், நான் ஹிப்பத்து தான்,உன் மனைவியை நான் அநியாயமாகப் பிடித்துக் கொள்ளவில்லை. இவளுடைய பாட்டன் அமீறேன்பவன், என் சொத்துக்களை பலவந்தமாக அபகரித்துக் கொண்டு ,என்னையும் கொன்றுவிட்டான். ஆகையால், நான் அவன் மீது ஏறி பிடித்து, அவனைக் கொன்று, பின் அவன் சந்ததிகளைத் தொடர்ந்து ஒவ்வொருவராக பிடித்து கொன்று வருகிறேன். அதுப்போலவே அவனுடைய பௌத்ரியாகிய இவளையும் பிடித்துக் கொண்டேன். இன்னும் சொற்பக் காலத்தில் இவளையும் கொன்று விடுவேன்.ஆனால், இன்று முதல் நான் இவளை வதைக்கவும், கொல்லவும் இடமில்லை. இன்றைக்கே புறப்பட சொல்லி கட்டளை வந்துவிட்டது. இதோ,நான் என் இருப்பிடம் செல்கிறேன். இவள் நிமித்தம் இனி யாரையும் பிடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கின்றேன்".
என்று சொல்லிவிட்டு, அந்தப் பேய் உடனே அவளை விட்டு புறப்பட்டு சென்றது . அப்போதே அவளுக்குள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து சுகமானாள் . இடைக் கண்ட மலிக்குதுஜ்ஜாரியும், ஆச்சரியமாய் சந்தோஷப்பட்டு ஆண்டவர் அவர்களை புகழ்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.