alangaara vaasal

Friday, March 29, 2013

நாகூர் தர்கா கொடிமரம் ஏற்றுதல் 08.04.2013

அன்பிற்கினிய நாகூர் ஆண்டவர்களின் பிரியமானவர்களே! சுமார் ஒரு மாத காலமாக அஜ்மீர் தர்கா ஷரீப் மற்றும் ஆந்திராவின் நெல்லூர் , காவாலி , கஷ்மூர் தர்கா ஷரீப் , மற்றும் சென்னை கோவளம் தர்கா ஷரீப் ஆகிய  இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்ததால் ,நம் பாதுஷா நாயகத்தின் வரலாற்றின் தொடர்ச்சியை பதிய முடியவில்லை .மன்னிக்கவும் .இன்ஷா அல்லாஹ் நாளை முதல் பணியை தொடர்கிறேன் .
இன்ஷா அல்லாஹ் வரும் 08.04.2013 திங்கள் அதி காலை  5.30 மணியளவில் நாகூர் தர்கா கந்தூரி வைபவத்தின் முத்தான முதல் வைபவமான கொடிமரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது .
5 மினாராக்களிலும் கொடிமரம் ஏற்றும் இந்த பிரமிப்பூட்டும் ஆச்சரியம் தரும் இந்த நிகழ்வை வந்து நேரில் பார்த்து மகிழுங்கள் என்று தங்களை அன்போடு அழைத்து மகிழ்கிறேன். வருகை தரும் பக்தர்கள் என்னை தொடர்புக் கொள்ளவும் .செல் நம்பர் +91 9894125478. நாகூர் தர்கா அலங்கார வாசலை மனம் குளிர கீழ்க்கண்ட நிரலை paste செய்து கண்டு மகிழுங்கள் .http://www.dinamalar.com/360_view_detail.asp?id=423&cat=424#topஇது அலங்கார வாசல் .

No comments:

Post a Comment