பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
நாகூர் ஹழ்ரத் செய்யிது ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின்
460-வது ஆண்டு கந்தூரி ஜியாரத் அழைப்பு
அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ....
தென்னிந்தியாவின் இணையில்லா ஞானப் பேரொளி , எங்கள் பாட்டனார் ஹழ்ரத் செய்யிதினா செய்யிது சாகுல் ஹமீது காதிர் வலி கன்ஜசவாய் கஞ்சபக்ஸ் பாதுஷா நாயகம் அவர்களின் ஏற்றமிகு கந்தூரி பெருவிழா ஹிஜ்ரி 1438 - ஆம் வருடம் ஜமாதுல் ஆஹிர் மாதம் பிறை 1 - ல் தொடங்கி பிறை 14 - ல் முடிவுபெற இருக்கிறது . 2017 - ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 28 - ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 13 - ஆம் தேதியோடு முடிவுபெற இருக்கிறது . புனிதமிகு இவ்விழாவிற்கு தாங்கள் சுற்றம் சூழ வருகை தந்து ஈருலக வாழ்விற்கும் தேவையான எல்லாவித ரஹ்மத்துக்களையும் , அருளையும் பெற்றுச் செல்லும்படி அன்புடன் அழைக்கின்றேன் . பாதுஷா நாயகம் அவர்களின் " நியாஜ் " என்னும் காணிக்கைகளை எனது முகவரிக்கு அனுப்பிவைத்து தங்களது நாட்டங்களையும் எண்ணங்களையும் வெற்றியாக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் . ஏழைகளுக்கும் பக்தர்களுக்கும் கந்தூரி மற்றும் மற்ற நாட்களில் அன்னதானம் கொடுக்க இருப்பதால் அன்னதானம் தர விரும்புபவர்கள் தாங்கள் விரும்பும் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகையினை கீழ்க்கண்ட முகவரி அல்லது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . காணிக்கை அனுப்பும் அனைவருக்கும் பாதுஷா நாயகம் அவர்களின்
பாத்திஹா தப்ரூக் அனுப்பி வைக்கப்படும் .
ஹாஜி . H . வாஞ்சூர் பக்கீர் சாஹிப் ( நாகூர் தர்கா பங்குதாரர் & முஜாவர் ) ,
12/29, பீரோடும் தெரு (கடற்கரை சாலை ) ,
நாகூர் - 611 002 ,
நாகை மாவட்டம் ,
தமிழ்நாடு .
செல் நம்பர் : +91 98941 25478 email ; hvfsahib@gmail.com
BANK ACCOUNT DETAILS :
ICICI BANK S.B A/C NO : 609401500942 NAGAPATTINAM BRANCH
INDIAN BANK S.B A/C NO : 516380134 NAGORE BRANCH . ifsc code : IDIB000N077
நாகூர் தர்கா கந்தூரியின் விசேஷ நாட்களாவன :
ஜமாதுல் அவ்வல் பிறை 26 ( 25.02.2017) சனிக்கிழமை காலை 5 : 30 மணிக்கு பாய்மரம் (கொடி மரம் ) ஏற்றப்படும்.
ஜமாதுல் ஆஹிர் பிறை 1 28.02.2017 செவ்வாய் இரவு 9:00 மணிக்கு கொடி ஏற்றுதல்
ஜமாதுல் ஆஹிர் பிறை 8 07.03.2017 செவ்வாய் இரவு 8 : 30 மணிக்கு வாணவேடிக்கை
ஜமாதுல் ஆஹிர் பிறை 9 08.03.2017 புதன் இரவு 10 : 00 மணிக்கு பீர் ஜமாவின் குரு சில்லா இருத்தல்
ஜமாதுல் ஆஹிர் பிறை 10 வியாழன் இரவு 7 : 00 மணிக்கு தாபூத்து என்னும் சந்தனக்கூடு நாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் நாகூர் வந்ததும் 10.03.2017 வெள்ளி அதிகாலை 5 : 00 மணிக்கு ஹழ்ரத் ஆண்டவர் அவர்களின் ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசுதல்
ஜமாதுல் ஆஹிர் பிறை 12 11.03.2017சனி மாலை 5 : 00 மணிக்கு பீர் பாவா கடற்கரைக்கு செல்லுதல்
ஜமாதுல் ஆஹிர் பிறை 14 13.03.2017திங்கள் இரவு 8 : 30 மணிக்கு கொடி இறக்குதல்
உங்கள் அனைவரின் வாழ்க்கை நலமோடும் வளமோடும் இருக்கவும் , தங்கள் தொழில் அபிவிருத்தி பெறவும் , தங்கள் குடும்பத்தினர் சுகத்தோடும் மகிழ்வோடும் நிம்மதியோடும் இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் .
தங்கள் அன்புள்ள ,
ஹாஜி . H . வாஞ்சூர் பக்கீர் சாஹிப் ( நாகூர் தர்கா பங்குதாரர் & முஜாவர் )